القرآن الكريم المصحف الإلكتروني إذاعات القرآن صوتيات القرآن أوقات الصلاة فهرس الموقع

கேள்வி 17 : ஸூறதுன்னாஸை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?

பதில் : ஸூறதுன்னாஸும் விளக்கவுரையும் :

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

(1) குல் அஊது பிரப்பின் னாஸ். (2) மலிகின் னாஸ். (3) இலாஹின் னாஸ். (4) மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். (5) அல்லஃதீ யுவஸ்விஸு பீஸுதூரின் னாஸ். (6) மினல் ஜின்னதி வன்னாஸ். (ஸூறதுன்னாஸ் 1-6)

விளக்கவுரை (தப்ஸீர்) :

(1) ((நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.) நபியே நான் மனிதர்களின் இரட்சகனிடம் பாதுகாப்பும் அடைக்கலமும் தேடுகிறேன்.

(2) (மனிதர்களின் அரசனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்)) அவன் நாடியவிதத்தில் அவர்களின் விவகாரங்களை கையாள்கிறான். அவனைத் தவிர அவர்களுக்கு வேறு அரசன் யாருமில்லை.

(3) (மக்களின் உண்மையான இறைவனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்). அவன்தான் அவர்களின் உண்மையாக வணங்படக்கூடிய இறைவன், அவனைத் தவிர அவர்களுக்கு எவரும் உண்மையாக வணங்கப்படக்கூடிய இறைவன் கிடையாது.

(4) மனிதர்களுடைய உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்தி விட்டு, மறைந்து கொள்பவனின் தீங்கைவிட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்) கருத்து : மனிதர்களின் உள்ளத்தில் வீணான சந்தேகங்களையும் ஊசலாட்டங்களையும் ஏற்படுத்தும் ஷைத்தான்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.

(5) (அவன் மனிதர்களின் உள்ளங்களில் சந்தேகங்களை உண்டுபன்னுகிறான்) அதாவது, மனிதர்களின் உள்ளங்களில் வீணான எண்ணங்களை அவன் ஏற்படுத்துகிறான்.

(6) (இத்தகையோர் ஜின்களிலும் மனிதர்களிலும் உள்ளனர்.) இவ்வாறு தீய எண்ணங்களை ஏற்படுத்துவோர் ஜின்களிலும் மனிதர்களிலும் உள்ளனர்.