القرآن الكريم المصحف الإلكتروني إذاعات القرآن صوتيات القرآن أوقات الصلاة فهرس الموقع

கேள்வி 10 : ஸூறதுல் மாஊனை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?

பதில் : ஸூறதுல் மாஊனும் அதன் விளக்கமும் :

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

(1) அரஅய்தல்லதீ யுகத்திபு பித்தீன். (2) பதாலிகல்லஃதீ யதுஃஉல் யதீம். (3) வலா யஹுழ்ழு அலா தஆமில் மிஸ்கீன். (4) பவய்லுல் லில்முஸல்லீன். (5) அல்லதீன ஹும் அன் ஸலாதிஹிம் ஸாஹூன். (6) அல்லஃதீன ஹும் யுராஊன். (7) வயம்னஊனல் மாஊன். (ஸூறதுல் மாஊன் 1-7) (கைமாறாகப் பரிமாறப்படும் சிறு பொருட்கள்).

விளக்கவுரை (தப்ஸீர்) :

(1) (தீர்ப்பு நாளை பொய்பிப்பவனை நபியே நீர் பார்த்தீரா?) விளக்கம் : மறுமையில் நற்கூலி - தண்டனை கொடுக்கப்படுவதென்பதை பொய்யெனக் கூறுபவனை உனக்குத் தெரியுமா!.

(2) (அவன் தான் அநாதையை மிரட்டுகிறான்) விளக்கம் : அதாவது அநாதையின் தேவையை நிறைவேற்றாது கடுமையாக நடந்து கொள்கிறான்.

(3) (ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவுமாட்டான்) விளக்கம் : அவன் எளியோருக்கு உணவளிக்க தன்னையோ பிறரையோ தூண்டமாட்டான்.

(4) (தொழுகையாளிகளுக்குக் கேடே உண்டாகட்டும்). அதாவது தொழுகையாளிக்கு வேதனையும் அழிவும் உண்டாகட்டும்.

(5) (அவர்கள் தொழுகையில் அலட்சியமாக இருக்கிறார்கள்.) அதாவது தமது தொழுகையில் பராமுகமாக இருக்கிறார்கள். தொழுகையின் நேரம் முடிவடையும் வரையில் அதனைப் பொருட்படுத்தாது இருப்பார்கள்.

(6) (அவர்கள் பிறருக்குக் காட்டவே தொழுகிறார்கள்.) அதாவது, அவர்கள் தமது செயல்களை அல்லாஹ்வுக்காக தூய்மையாக நிறைவேற்றாது பிறருக்கு காண்பிக்கவே தமது தொழுகையையும் செயற்பாடுகளையும் மேற்கொள்கின்றனர்.

(7) (அவர்கள் சாதாரண சிறிய பொருட்களைக் கொடுத்துதவுவதைத் தடுக்கின்றார்கள்.) உதவுவதால் தங்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாதவற்றினாலும் கூட மற்றவர்களுக்கு உதவுவதை தடுக்கிறார்கள்.