القرآن الكريم المصحف الإلكتروني إذاعات القرآن صوتيات القرآن أوقات الصلاة فهرس الموقع

கேள்வி 5: வுழுவின் பர்ளுகள் என்றால் என்ன? அவற்றை சுருக்கமாக குறிப்பிடுக?

பதில் : வுழுவின் பர்ளுகள் என்பது : வுழுவின் போது கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்றை ஒரு முஸ்லிம் செய்யாது விட்டால் வுழு நிறைவேறாது என்றிருக்கும் காரியங்களைக் குறிக்கும். அவை பின்வருமாறு :

1- முகத்தைக் கழுவுதல். அதில் வாய்கொப்பளித்தல், நாசுக்கு நீர் செலுத்தல் போன்றவை அடங்கும்.

2- இரு கைகளையும் இரு முழங்கைகள் உட்படக் கழுவுதல்.

3- இரு காதுகள் உட்பட தலை முழுவதையும் மஸ்ஹு செய்தல்.

4- கரண்டை- கணுக்கால் - உட்பட இரு கால்களையும் கழுவுதல்.

5- உறுப்புகளை கழுவுவதில் ஒழுங்கை கடைப்பித்தல். அதாவது முகத்தைக் கழுவுதல், பின்னர் இரு கைகளையும் கழுவுதல், பின்னர் தலையை மஸ்ஹு செய்தல், பின்னர் இரு கால்களையும் கழுவுதல்.

6- தொடராகச் செய்தல், அதாவது வுழுவின்போது கழுவிய உறுப்பு காய முன் மற்றைய உறுப்பை கால இடை வெளியின்றி கழுவ வேண்டும்.

அதாவது வுழுவின் போது கழுவ வேண்டிய உறுப்புகளிள் சிலதை ஒரு நேரத்திலும் எஞ்சியவற்றை இன்னொரு நேரத்திலும் கழுவுவதை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். அவ்வாறு செய்தால் ஒருவரின் வுழு நிறைவேறாது.