القرآن الكريم المصحف الإلكتروني إذاعات القرآن صوتيات القرآن أوقات الصلاة فهرس الموقع

கேள்வி 4 : நீ எப்படி வுழு செய்கிறீர்? (நீ வுழு செய்யும் முறையை குறிப்பிடுக?)

பதில் : இரு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவுதல்.

மூன்று தடவைகள் நாசுக்கு நீர் செலுத்தி, நன்றாக சீரி வாய் கொப்பளித்தல்.

வாய்க்கொப்பளித்தல் என்பது நீரை வாய்க்குள் செலுத்தி அதனை நன்கு அலசி வெளியேற்றல்,

இஷ்தின்ஷாக் என்பது வலது கையால் நீரை மூக்கினுள் செலுத்தி நன்கு உள்ளிழுப்பதைக் குறிக்கும்.

அல் இஸ்தின்ஸார் என்பது மூக்கின் உள்ளே உற்செலுத்திய நீரை இடது கையால் வெளியேற்றுவதைக் குறிக்கும்.

பின்னர் முககத்தை மூன்று முறை கழுவுதல்.

பின்னர் இரு கைகளையும் இரு முழங்கை உட்பட மூன்று முறை கழுவுதல்

பிறகு உனது இரண்டு கைகளையும் முன் தலையிருந்து ஆரம்பித்து பிற்பகுதிவரை கொண்டு சென்று தலை முழுவதைiயும் மஸ்ஹு (நீரால் தடவுதல்) செய்வதோடு இரண்டு காதுகளையும் மஸ்ஹு செய்தல்.

பின்னர் உனது இருகால்களையும் கரண்டை உட்பட மூன்று முறை கழுவுதல் வேண்டும்.

இதுதான் வுழு செய்வதன் முழுமையான முறையாகும். இது தொடர்பான ஹதீஸ்கள் புஹாரி மற்றும் முஸ்லிம் கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. அவைகளை உஸ்மான் (ரழி) மற்றும் அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரழி) போன்றோரும் ஏனைய ஸஹாபாக்களும் அறிவித்துள்ளனர். நபி (ஸல்) வுழுவை ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் செய்வார்கள் என்றும் புஹாரி மற்றும் ஏனைய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. அதாவது நபி (ஸல்) வுழுவின் உறுப்புகளை ஒரு தடவை அல்லது இரு தடவைகள் கழுவுவார்கள் என்பதே இதன் கருத்தாகும்.