القرآن الكريم المصحف الإلكتروني إذاعات القرآن صوتيات القرآن أوقات الصلاة فهرس الموقع

இஸ்லாம் வாளால் பரவியதா?

முதலாவது வாள் என்ற வார்த்தை அல்குர்ஆனில் ஒரு தடவையேனும் குறிப்பிடப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய வரலாற்றில் போரே நிகழாத நாடுகளில்தான் உலக முஸ்லிம்களின் பெருந்தொகையினர் வசித்து வருகின்றனர். இதற்கு இன்துநேஷியா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் சிறந்த உதாரணமாகும். முஸ்லிம்கள் வெற்றிகொண்ட தேசங்களில் இன்றுவரையில் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் ஏனையோரும் வாழ்ந்து வருவது, இஸ்லாம் வாளால் பரப்பபடவில்லை என்பதற்கான சான்றாகும். அதே வேளை முஸ்லிம் அல்லாதோரால் காலணித்துவத்திற்கு உட்பட்ட நாடுகளில் முஸ்லிம்கள் சிறு தொகையினரே உள்ளனர். கூட்டுப் படுகொலையும், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் தமது மதத்தை ஏற்குமாறு பலவந்தப் படுத்தியமையும் இதற்குக் காரணமாகும். சிலுவைப்போர் இதற்கு சிறந்த உதாரணமாக காணப்படுகிறது.

ஜெனீவா பல்கலைக்கழகத்தின் இயக்குனர் எட்வார்ட் மான்டெட் தமது விரிவுரையொன்றில் இவ்வாறு கூறினார்: 'இஸ்லாம் ஒரு வேகமாக பரவி வரும் மதம், இது நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகளின் எந்த ஊக்குவிப்பு ஏதுமின்றி தானாகவே பரவுகிறது. ஏனென்றால், ஒவ்வொரு முஸ்லிமும் இயல்பிலேயே மதப்பிரச்சாரகர்களாவர். முஸ்லிமைப் பொருத்தவரை அவர்; இறைவிசுவாசத்தில் மிகவும் உறுதியானவர். அவருடைய இறைவிசுவாசத்தின் பலமானது அவரது இதயத்தையும் பகுத்தறிவையும் ஆகர்சித்துள்ளது. இது ஏனைய மதத்தில் உள்ள ஒருவருக்கு இல்லாத இஸ்லாத்திற்கேயுரிய ஒரு தனித்துவமாகும். இதன் காரணமாக இறைவிசுவாசத்தால் ஆகர்ஷிக்கப்பட்டு ஈமான் நிரம்பிய ஒரு முஸ்லிம் எங்கு சென்றாலும், எங்கு தங்கினாலும் தனது மதத்தைப் பிரச்சாரம் செய்பவராகவே திகழ்வார். அத்துடன் இவ்வாறான பலமான இறைவிசுவாசமிக்க முஸ்லிமுடன் தொடர்பு கொள்ளும் பலதெய்வ விசுவாசிகளிடத்திலும் இந்த நம்பிக்கை சென்றடையும். இறைநம்பிக்கையுடன் சேர்த்து, இஸ்லாம் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளுடன் இணைந்து செல்வதுடன், இந்த பலமான மார்க்கம் வேண்டிநிற்கும் சூழலுக்கு ஏற்ப தன்னை அனுசரித்து, இம்மார்க்கம் வாழும் சூழலை மாற்றியமைக்கும் அற்புதமான திறனையும் கொண்டுள்ளது'. (நூல் ஹதீகா ஆசிரியர் :ஸுலைமான இப்னு ஸாலிஹ் அல் கராஷி). تقدم

PDF